2025 ஜூன் 30, திங்கட்கிழமை

குழியை மூட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Kanagaraj   / 2014 மே 14 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன் 


யாழ். பருத்தித்துறை நகரத்தில் நடைபாதையில் உள்ள வாய்கால் மூடப்படாமை காரணமாக பாதசாரிகளும் துவிச்சக்கரவண்டியில் செல்வோரும் அதனுள் வீழ்ந்து காயமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்வாயினை மூடி நடைபாதை அமைக்கும் பணியினை வீதி அதிகார சபை மேற்கொண்டதாகவும் அவர்கள் குறித்த கால்வாய் அமைந்துள்ள பகுதியினை மூடாமல் விட்டுச் சென்றுள்ளதாகவும் பருத்தித்துறை நகர சபையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இவ்வீதியில்இரவு வேளைகளில்; பயணிப்போர் வாய்க்காலினுள் வீழ்கின்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இதற்கான தீர்வினை பெற்றுத்தருமாறு நகர சபையிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X