2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆனந்தபுரத்தில் பொதுமக்கள் காணிகளில் ஆயுதங்கள்

Kogilavani   / 2014 மே 15 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஆனந்தபுரம் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணிகளினுள் ஆயுதங்கள் இருப்பதினால் தாங்கள் அச்சத்துடன் நாட்களைக் கழிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்னரே மீள்குடியேற அனுமதிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியேறியுள்ள போதும், அவர்கள் குடியேறியுள்ள காணிகளில் வெடிபொருட்களின் ஆபத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளைத் தவிர்த்து மேலதிக பற்றைகளினைத் துப்பரவு செய்யும் போது குறைந்தபட்சம் ஒரு வெடிபொருளையாவது தாங்கள் காண்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பிரதேச செயலகத்திற்கு பலமுறை முறையிட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உக்கிரமான சண்டைகள் ஆனந்தபுரத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X