2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வல்வை விபத்தில் ஒருவர் காயம்

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    ற.றஜீவன்


யாழ்.வல்லைப் பகுதியில் கார் ஒன்று நேற்று (16) மாலை குடைசாய்ந்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் நெல்லியடியினைச் சேர்ந்த பாலகிருஸ்ணன் சுதர்சன் (24) என்பவரே காயமடைந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து நெல்லியடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த மேற்படி காரின் சில்லொன்றின் காற்று திடீரென இறங்கியதால் கார் குடைசாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X