2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விபத்தில் பெண் படுகாயம் : மூவர் கைது

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.றொசாந்த் ,எஸ்.ஜெகநாதன்

திருநெல்வேலி சந்திக்கு அருகாமையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இன்று (17) காலை விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளினைச் செலுத்திச் சென்ற கோண்டாவிலினைச் சேர்ந்த அருணாச்சலம் கங்கா (26) என்ற பெண்ணே படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பேருந்தினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்ல தடையாக இருந்த படுகாயமடைந்த பெண்ணின் சகோதரன், மேலும் ஒரு இளைஞன் மற்றும் பேருந்து சாரதியினையும் கைது செய்துள்ளதாகவும் பேருந்தினையும் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்வம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இப் பெண்ணை பின்னால் வந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை பேரூந்து மோதி தள்ளி வீழ்த்தியதுடன், இவரது கால்கள் மீது சில்லுகள் ஏறிச் சென்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து சாரதி வேகமாக பேருந்தினைச் செலுத்தி வந்தததினாலேயே இந்த  விபத்து நிகழ்ந்ததாக கூறி படுகாயமடைந்த பெண்ணின் சகோதரர் ஒருவர் உட்பட சில இளைஞர்கள் பேருந்து சாரதியையும் பேருந்தினையும் தாக்க முற்பட்டனர்.

இவ்வேளை அங்கு வந்த பொலிஸாரிற்கும் இளைஞர் குழுவிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலையேற்பட்டது. இதனையடுத்து மேலதிக பொலிஸாரும், இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து பொலிஸார் பேருந்தினை பொலிஸ் நிலையம் எடுத்துச் செல்ல முற்பட்ட வேளை மீண்டும் இளைஞர்கள் குழு பொலிஸாருடன் முரண்படவே, இம் மூவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
 






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X