2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மலேரியா விழிப்புணர்வு நடைபவனி

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

  
- ற.றஜீவன்

உலக மலேரியா தினத்தையொட்டி மலேரியா விழிப்புணர்வு நடைபவனி வெள்ளிக்கிழமை(23) பருத்தித்துறையில் நடைபெற்றது..
பருத்தித்துறை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் ஏற்பாட்டிலேயே இந்த விழிப்புணர்வு நடைபவனி நடத்தப்பட்டது.

பருத்தித்துறை சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் முன்பாகவிருந்து ஆரம்பித்த இப்; பேரணி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தினைச் சென்றடைந்தது. தொடர்ந்து அங்கு மலேரியா விழப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்த ஊர்வலத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண போக்குவரத்து வாணிப மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பா.டெனீஸ்வரன், சுகாதாரத் தொண்டர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச சபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X