2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பசுமாட்டினை இறைச்சியாக்கியவர்களுக்குத் தண்டம்

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

பசுமாட்டினை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் உடுப்பிட்டிப் பகுதியில் வைத்து வியாழக்கிழமை(22) கைது செய்யப்பட்ட இருவருக்கும் தலா 7500 ரூபா தண்டம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் வெள்ளிக்கிழமை(23) உத்தரவிட்டார்.

உடுப்பிட்டிப் பகுதியினைச் சேர்ந்த சுப்பிரமணியம் சதீஸ்குமார் (23), ஜெனடிக் ஜேசுதாஸ் (19) ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் பசு மாடொன்றினை இறைச்சியாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்குச் சென்று குறித்த இருவரையும் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 தொடர்ந்து இருவரையும் வெள்ளிக்கிழமை(23) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X