2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் யாழ். மேயர் தடை

Kanagaraj   / 2014 மே 29 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

யாழ்.மாநகர சபையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள்  இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்க முற்பட்ட வேளை, மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா அதற்கு இடமளிக்காமல் தடை விதித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாது சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
யாழ்.மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத் தொடர் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று வியாழக்கிழமை (29) மாநகர சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

கூட்டம் ஆரம்பித்த வேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாங்கள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் போவதாகக்கூறி எழுந்த போது, அதனை முதல்வர் மறுத்தார்.

அவ்வாறு அஞ்சலி செலுத்துவதாயின் மறைந்த அல்பிரேட் துரையப்பா (முன்னாய் மாநகர சபை முதல்வர்) முதல் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனால் அதிருப்பதியடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

இருந்தும், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களுக்கான அஞ்சலி செலுத்தப் போவதாக த.தே.கூ தெரிவித்தனர். எனினும் அதனை மறுத்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பமிட்டமையினால் சபையிலிருந்து த.தே.கூ உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற போது, இந்தியாவின் 15 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர தாமோரதாஸ் மோடிக்கு முதல்வர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் எழுந்து நின்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • aj Thursday, 29 May 2014 08:46 AM

    வரும் நகர சபை தேர்தலோட யோகேஸ்வரி அம்மா அரசியலுக்கு சாவு மணி அடிப்பது உறுதி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X