2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆட்சி மாறினாலும் வெளியயுறவுக் கொள்ளை மாறாது: கஜேந்திரகுமார்

Kanagaraj   / 2014 மே 29 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

இந்தியாவில் ஆட்சி மாறினாலும் அந்த நாட்டினுடைய வெளியுறவுக் கொள்கை மாற்றமடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று வியாழக்கிழமை (29) தெரிவித்தார்.

யாழ்;.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,       

தமிழ்நாட்டில் ஏற்படும் அழுத்தங்கள் மற்றும் இந்தியாவின் நலனுக்கு எதிராக இலங்கை செயற்படுதல் போன்ற காரணங்கள் நடைபெற்றால் மட்டுமே இந்திய வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் வரும். இல்லாவிடின் அதில் மாற்றங்கள் ஏற்படமாட்டாது.

அதனால் 13 ஆவது திருத்தச் சட்டத்துடன் தமிழர்களை இந்தியா முடக்கிவிடும் என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X