2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சங்கிலித் திருடர்கள் விளக்கமறியலில்

Kogilavani   / 2014 மே 29 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.சட்டநாதர் கோவிலடி வீதியில் தனியே நின்றிருந்த மூதாட்டியொருவரின் சங்கிலியினை அறுத்துச் சென்ற மூவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்குள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் வியாழக்கிழமை (29) உத்தரவிட்டார்
மேற்படி மூன்று நபர்களையும் கோப்பாய் பொலிஸார் இன்று (29) யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

இது தொடர்பில் மேலுமு; தெரியவருவதாவது,

யாழ்.சட்டநாதர் கோவிலடி வீதியில் தனியே நின்றிருந்த மூதாட்டியொருவரின் சங்கிலியினை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அறுத்துக் கொண்டு செல்வதினை பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் அவதானித்து, மோட்டார் சைக்கிளில் சென்றவர்களைத் துரத்திச் சென்று முடமாவடிச் சந்தியில் வைத்து புதன்கிழமை (29) மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து, குறித்த மூவரும் அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்களினால் நையப் புடைக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X