2025 ஜூன் 30, திங்கட்கிழமை

காணி சுவீகரிப்பு நடவடிக்கை : மக்கள் எதிர்பார்ப்பால் கைவிடப்பட்டது

Kogilavani   / 2014 ஜூன் 02 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-  எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன்


யாழ்.அச்சுவேலி இராச வீதியில் இராணுவ முகாமிற்கு காணி சுவீகரிக்கும் நோக்கில் நிலஅளவை மேற்கொள்ள எடுத்த முயற்சி மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

அப்பிரதேசத்தினைச் சேர்ந்த 9 குடும்பங்களில் 53 ஏக்கர் தோட்டக் காணியினை இராணுவ முகாம் அமைப்பதற்கு சுவீகரிக்கப்படுவதாக ஏற்கனவே துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, திங்கட்கிழமை (02) காலை நிலஅளவையாளர் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து குறித்த காணிகளை அளவீடு செய்ய முயன்றனர்.

அவ்வேளை அங்கு கூடிய, காணி உரிமையாளர்கள் மற்றும் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு நிலவிய கடும் எதிர்ப்புக் காரணமாக குறித்த காணிகளை அளவீடுகள் மேற்கொள்வதினை கைவிட்டு நிலஅளவையாளர்கள் அங்கிருந்து சென்றனர்.

இது தொடர்பில் காணி உரிமையாளர்களினால் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த புதன்கிழமை (28) அல்வாய் திக்கம் பகுதியில் 8 ஏக்கர் காணிகள் இராணுவ முகாம் சுவீகரிக்கும் நோக்கில் நிலஅளவைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X