2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கான்ஸ்டபிளின் பணத்தை திருடிய இரு சிறுவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 ஜூன் 03 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். ஊர்காவற்றுறைப் பகுதியில் கடலோரக் காவல் பணியில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருடைய 18 ஆயிரம் ரூபா பணத்தினை திருடிய இரு சிறுவர்களை திங்கட்கிழமை (02) மாலை கைது செய்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சிறுவர்கள் 10 மற்றும் 8 வயதினையுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடலோரக் காவற்பணியில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருடைய 18,000 ரூபா பணம் கடந்த 24 ஆம் திகதி திருட்டுப்போயிருந்தது. இது தொடர்பில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் ஊர்காவற்றுறை கடற்கரைக்கு திங்கட்கிழமை (02) மாலை வந்திருந்த ஒருவரது கைப்பையினைத் திருடிய மூன்று சிறுவர்கள் (8, 10, 12 வயதுடையவர்கள்) அங்கு நின்ற பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 12 வயதுடைய சிறுவளை குற்றமற்றவன் என விடுவித்த பொலிஸார், மற்றைய இரண்டு சிறுவர்களிடமும் விசாரணை மேற்கொண்டதில், குறித்த இரு சிறுவர்களே பொலிஸ் கான்ஸ்டபிளுடைய பணத்தினையும் திருடினார்கள் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த இரு சிறுவர்களையும் யாழ்.பெண்கள் மற்றும் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X