2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பணத்தைத் திருடிய இரு சிறுவர்கள் நன்னடத்தை பாடசாலையில்

Kanagaraj   / 2014 ஜூன் 04 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.ஊர்காவற்றுறைப் பகுதியில் கடலோரக் காவல் பணியில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருடைய 18 ஆயிரம் ரூபா பணத்தினை திருடிய இரு சிறுவர்களையும,; எதிர்வரும் 17ஆம் திகதி வரையும் அரச அங்கீகாரம் பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தடுத்து வைக்குமாறு, யாழ்.பெண்கள் மற்றும் சிறுவர் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி இன்று புதன்கிழமை (04) பொலிஸாரிற்கு உத்தரவிட்டார்.

அத்துடன், அத்தினத்தில் குறித்த சிறுவர்களுடன் அவர்களின் பெற்றோர்களையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதவான் உத்தரவிட்டார்.

இது பற்றித் தெரியவருவதாவது,

கடலோரக் காவற்பணியில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருடைய 18,000 ரூபா பணம் கடந்த 24 ஆம் திகதி திருட்டுப்போயிருந்தது.

இது தொடர்பில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் ஊர்காவற்றுறை கடற்கரைக்கு கடந்த திங்கட்கிழமை (02) மாலை வந்திருந்த ஒருவரது கைப்பையினைத் திருடிய மூன்று சிறுவர்கள் (8, 10, 12 வயது) அங்கு நின்ற பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 12 வயதுடைய சிறுவன் குற்றமற்றவன் என விடுவித்த பொலிஸார், மற்றய இரண்டு சிறுவர்களிடமும் விசாரணை மேற்கொண்டதில், குறித்த இரு சிறுவர்களே பொலிஸ் கான்ஸ்டபிளுடைய பணத்தினையும் திருடினார்கள் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த இரு சிறுவர்களையும் யாழ்.பெண்கள் மற்றும் சிறுவர் நீதிமன்றத்தில் இன்று (04) ஆஜர்ப்படுத்திய போதே நீதிவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X