2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தங்கூசி வலை பாவித்த நால்வருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 05 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன் 

யாழ். எழுவைதீவுக் கடலில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 04 பேருக்கும் தலா 5,000 ரூபா படி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார்  வியாழக்கிழமை (05) தண்டம் விதித்தார்.

அத்துடன், இவர்களிடமிருந்து கைப்பற்றிய தங்கூசி வலைகளை அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சுதுமலை, சாவற்கட்டு, காக்கைதீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேற்படி 04 பேரும் செவ்வாய்க்கிழமை (03) கைதுசெய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து 04 தொகுதி தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X