2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் இரண்டு நீர்த்தாங்கிகள்

Kogilavani   / 2014 ஜூன் 06 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகளிலுள்ள 20 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் குடிநீர் விநியோகத்திட்டத்தினை மேற்கொள்ளும் பொருட்டு 1620 மில்லியன் ரூபா செலவில் இரண்டு நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர் ஒருவர் வியாழக்கிழமை (5) தெரிவித்தார்.

ஜப்பானிய அரசின் நன்;கொடை நிதியுதவியில் 880 மில்லியன் ரூபாவிலும் இலங்கை அரசின் நிதியுதவி 740 ரூபாவின் மூலமும் இந்தத் தண்ணீர்த் தாங்கிகள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

கண்டாவளைப் பிரதேசத்திற்கான தண்ணீர்த்தாங்கி பரந்தனிலும், கரைச்சி பிரதேசத்திற்கான தண்ணீர்த் தாங்கி டிப்போ சந்திப் பகுதியிலும் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேற்படி நீர்த்தாங்கிகள் அமைக்கும் பணி பெருமளவு முடிவுற்றுள்ளதாகவும் மிகுதி வேலைகளும் விரைவில் முடிவடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகமானது யுத்த காலத்தில் சேதமடைந்ததுடன், அவற்றுக்கான நீர்த்தாங்களும் சேதமாக்கப்பட்டன.

இதன்பின்னரே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, குடிநீர்த் தாங்கிகள் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கான வேலைத்திட்ட  பணிகள் நிறைவுபெறும் வரையில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தற்காலிகமாக பொன்னகர், பாரதிபுரம், ஆனந்தபுரம், கிருஸ்ணபுரம், மலையாளபுரம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X