2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தமிழ் கற்பது இலகு: உதயபெரேரா

Suganthini Ratnam   / 2014 ஜூன் 06 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன் 


தமிழ்மொழிச் சகோதரர்களுக்கு சிங்களமொழியை கற்றுக்கொடுக்க வேண்டும். அதேபோன்று, சிங்களமொழிச் சகோதரர்களுக்கு தமிழ்மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதயபெரேரா தெரிவித்தார்.

தமிழ்மொழி பயிற்சியில் தேர்ச்சி பெற்ற இராணுவ வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு காங்கேசன்துறை தல்செவன விருந்தினர் விடுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'எல்லோரும் ஒன்றாக, ஒற்றுமையாக வாழ்வதற்கு மொழி கட்டாயமானது. அந்த வகையில், நாங்கள் தமிழ்மொழிச் சகோதரர்களுக்கு சிங்களமொழியை கற்றுக்கொடுக்க வேண்டும். அதேபோன்று, சிங்களமொழிச் சகோதரர்களுக்கு தமிழ்மொழியை கற்றுக்கொடுக்க வேண்டும்.

தமிழ்மொழி மூல பயிற்சிநெறியை சில இராணுவ வீரர்கள் கற்றுத் தேர்ந்துள்ளார்கள். சில இராணுவ அதிகாரிகள் உட்பட சில இராணுவத்தினர் இப்பாடத்தை சரியாக முடிக்கவில்லை. உங்களால் முடியாதது ஒன்றும் இல்லை. ஆகவே, உங்களாலும் தமிழ்மொழியை கற்க முடியும். தமிழ்மொழி கற்பது இலகுவானது.

நாட்டில் உள்ள மும்மொழிகளில் தமிழ், சிங்களம் கட்டாயமானதாகும். நாங்கள் இராணுவ வீரர்களுக்கு கூறிக்கொள்வதாவது, கட்டாயம் நீங்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று. அதேவேளை, தமிழ் மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன் நீங்களும் சிங்களமொழியை கற்கவேண்டும்.

யாழ். குடாநாட்டில் அனைத்துப் பிரதேசங்களிலும் கடமையாற்றும் இராணுவ வீரர்களுக்குத் தமிழ்மொழியை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த தமிழ்மொழிப் பயிற்சிநெறி ஆரம்பிக்கப்பட்டது' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X