2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முதியோர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரல்

Kogilavani   / 2014 ஜூன் 06 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில் முதியோர்களின் ஆக்கத்திறன்களை வெளிக்கொணர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செயலகத்தின் பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று சர்வதேச முதியோர் தினத்தில் நாடு முழுவதிலுமுள்ள முதியோர்களின் கலை வடிவங்கள் தாங்கிய முதியோர் சஞ்சிகை வெளியிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்காக கலை ஆக்கங்களை அனுப்பி வைக்குமாறு மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்கள் மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர்களை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வெற்றிபெற்ற முதியோர்களின் புகைப்படங்களையும் அனுப்பி வைக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X