2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கடையில் திருட்டு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 06 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ். ஊரணிப் பகுதியிலுள்ள பலசரக்கு கடையொன்றிலிருந்து பால்மா, ஓடிக்குலோன், அரிசி, தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் உள்ளிட்ட சுமார் 100,000  ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் நேற்று வியாழக்கிழமை  இரவு திருட்டுப்போயுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை  காலை கடையைத் திறப்பதற்காக வந்த உரிமையாளர், பின் கதவு உடைத்துத் திருடப்பட்டதைக் கண்டு வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும்  பொலிஸார் கூறினர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X