2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கி மீட்பு : ஒருவர் கைது

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலிப் பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, இரண்டு ஏ.கே 47 ரக  துப்பாக்கிகளை நேற்று வெள்ளிக்கிழமை (06) கைப்பற்றியதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அந்த வீட்டிலிருந்த 22 வயது இளைஞனையும் கைது செய்ததாகவும், தமக்கு  கிடைத்த தகவலையடுத்து படையினரின் உதவியுடன் சுற்றிவளைப்பு தேடுதல் நடாத்தியபோது,  வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை கைப்பற்றிதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞனை விசாரணை செய்ய, கொழும்பிலிருந்து விசேட புலனாய்வுப் பிரிவினர் வருகை தரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X