2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மருதனார்மடம் சந்தைக்கு புதிய கட்டிடம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 08 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா


வலி. தெற்கு (உடுவில்) பிரதேச சபைக்குச் சொந்தமான மருதனார்மடம் சந்தைக்கு 50 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) தெரிவித்தார்.

சபையின் நிதியில் மேற்கொள்ளப்படும் இந்தக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றதாகவும் தற்போது கட்டிடப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய சந்தைக் கட்டிடத்தொகுதியானது வசதி வாய்ப்புகளுடன் கூடிய கடைத்தொகுதியையும் உள்ளடக்கியதாக அமைக்கப்படவுள்ளதுடன், கட்டிட வேலைகள் எதிர்வரும் 8 மாதங்களுக்குள் முடிவுறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X