2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மயக்க மருந்து தெளித்துவிட்டு நகைகள் திருட்டு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 08 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ். கோப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்தவர்களுக்கு மயக்க மருந்து தெளித்துவிட்டு 10 பவுண் தங்கநகைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை திருடப்பட்டுள்ளது என்று  அவ்வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததாக  கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்வீட்டிலுள்ளவர்கள் உறக்கத்திலிருந்தபோது வீட்டினுள்  உள்நுழைந்தவர்கள் அனைவர் மீதும் மயக்க மருந்து தெளித்துவிட்டு நகைகளை திருடியுள்ளனர். இன்றையதினம் காலை அவர்கள் எழுந்து பார்த்தபோதே, நகைகள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்தது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .