2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2014 ஜூன் 15 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன், ஐ.நேசமணி

யாழ்.மூளாய் முன்கோடைப் பகுதியில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை மீட்டதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கீரிமலை வீதி, சித்தங்கேணியினைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி பவிகரன் (37) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் கையில் பிளேட் ஒன்று இருந்ததாகவும் விசாரணையின் போது சடலமாக மீட்கப்பட்ட நபர் குறித்த பகுதிக்கு அருகில் உள்ள கடையொன்றில் பிளேட் வாங்கி சென்றதாக உரிமையாளர் தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .