2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விபத்து: இரு பெண்கள் படுகாயம்

Kanagaraj   / 2014 ஜூன் 22 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.பொலிகண்டி கடற்கரை வீதியில் சனிக்கிழமை (21) மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதிக்கருகில் இருந்த கிணறு ஒன்றில் விழுந்ததில், இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.ஐ.விக்கிரமராட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார்.

பொலிகண்டிப் பகுதியினைச் சேர்ந்த சுப்பிரமணியம் இந்திராணி (52), ஜெயந்திரம் சசிகலா (23) ஆகிய இருவருமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .