2025 ஜூலை 02, புதன்கிழமை

வல்வெட்டித்துறை புதிய மரக்கறிச் சந்தை கட்டிட தொகுதி திறப்பு

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ற.றஜீவன்

நெல்சிப் திட்டத்தின் கீழ் 50மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 3 மாடிகளை கொண்ட வல்வெட்டித்துறைச் பொதுசந்தையின் நடவடிக்கைகள் புதன்கிழமை(25)  நகர சபையின் உறுப்பினர் கந்தசாமி சதீஸினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
 
கட்டுமான பணிகள் காரணமாக இதுவரை காலமும் சந்தை நடவடிக்ககைகள் தனியார் காணியொன்றில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கட்டிடப் பணிகள் பூர்தியடைந்தமையினால் தங்களை சந்தைக் கட்டிடத் தொகுதியில் வியாபாரம் செய்ய அனுமதிக்கும்படி வியாபாரிகள் கோரிக்கை முன்வைத்தனர்.

இதனையடுத்து திறப்பு விழா நடத்தப்படுவதற்கு முன்னராகவே, வியாபார நடவடிக்கைகளுக்காக குறித்த சந்தை கட்டடிட தொகுதி திறந்துவிடப்பட்டதாக நகர சபையின் உறுப்பினர் குறிப்பிட்டார்.

இருப்பினும் சந்தையின் திறப்பு விழா நடத்துவது தொடர்பான தீர்மானம் நகர சபையின் மாதாந்தக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .