2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்து: ஒருவர் படுகாயம்

Super User   / 2014 ஜூன் 30 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


யாழ். இணுவில் சந்தியில் திங்கட்கிழமை (30) இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிற்றூர்தி வண்டியொன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த மல்லாகத்தினைச் சேர்ந்த வி.சுதாகரன் (வயது 32) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .