2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மாடு வெட்டியவருக்கு பிணை

Kanagaraj   / 2014 ஜூலை 02 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

யாழ். கரணவாய் அந்திரான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடு வெட்டிய 19வயது நபரை 25000 ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்ததுடன், குறித்த வழக்கினை ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி வரை ஒத்திவைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் இன்று (02) உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 33 கிலோ இறைச்சியையும் அழிக்கும்படியும் நீதவான் பொலிஸாரிற்கு உத்தரவிட்டார்.
மேற்படி நபர் சட்டவிரோதமாக மாடு வெட்டிக்கொண்டிருக்கும் போது நெல்லியடிப் பொலிஸாரினால் இன்று (02) காலை கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .