2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா

யாழ். கல்லுண்டாய்வெளி பகுதியில் கழுத்தில் வெட்டு காயத்துடன் ஆணொருவரின் சடலம் இன்று சனிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம் பகுதியினைச் சேர்ந்த நகராசா குகதீபன் (28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து மேற்படி சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .