2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிதம்பரக் கல்லூரியின் கண்ணாடிகள் அடித்து உடைப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 16 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


- செல்வநாயகம் கபிலன்


யாழ். வல்வெட்டித்துறைச் சிதம்பரக் கல்லூரியின் கணினி அறையின் ஜன்னல் கண்ணாடிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (15) இரவு இனந்தெரியாத நபர்களினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் இன்று புதன்கிழமை (16) தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலில் கணினி அறையின் 9 ஜன்னல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இது சம்பவம் தொடர்பில் கல்லூரி அதிபர் சி.இராஜதுரை இன்று புதன்கிழமை (16) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லையெனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சும்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .