2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பணத்தைக் கேட்டவருக்கு கத்தி குத்து

Menaka Mookandi   / 2014 ஜூலை 25 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

கொடுத்த பணத்தினைத் திருப்பிக் கேட்கச் சென்றவர் மீது கடன் வாங்கியவர் கத்தியால் குத்திய சம்பவம் யாழ்., அரசடிப் பத்திரகாளி கோவிலடிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில், அதேயிடத்தினைச் சேர்ந்த 53 வயதுடைய ந.கமலநாதன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்., போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி படுகாயமுற்றவர், தனது உறவினர் ஒருவரிற்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் கைமாற்றாகக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கொடுத்த பணத்தினைத் திருப்பிக் கேட்கச் சென்ற வேளையிலே கத்திக்குத்துக்கு ஆளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .