2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஜூலை 30 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.,அல்வாய் வடக்குப் பகுதியினைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியொருவரை  பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அதேயிடத்தினைச் சேர்ந்த 40 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கறுப்பையா ஜீவராணி, செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

சிறுமியில் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் மேற்படி சந்தேகநபர் சிறுமியின் குடும்பத்துடன் சிநேகமாகப் பழகி வந்துள்ளார். இந்நிலையில், மேற்படி சிறுமியை கடந்த திங்கட்கிழமை (28), பாடசாலைக்கு துவிச்சக்கரவண்டியில் அழைத்துச் செல்வதாக கூறி, வியாபாரமூலைப் பகுதியிலுள்ள பற்றைக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

இதனை அவதானித்த அப்பகுதியில் நின்றிருந்த இளைஞர்கள் சிலர், இது தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸாரிற்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்தனர்.

தொடர்ந்து, சிறுமி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகவில்லையென மருத்துவ அறிக்கை பெறப்பட்டது.

தொடர்ந்து, சந்தேகநபரை சிறுவர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (29) பருத்தித்துறைப் பொலிஸார் ஆஜர்ப்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .