2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வர்த்தகருக்கு வாள்வெட்டு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 30 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

யாழ். சுன்னாகம் நகரப் பகுதியில் வாள்வெட்டுக்கு  இலக்காகி படுகாயமடைந்த வர்த்தகரான    இராஜரத்தினம் இராஜகுமார் (வயது 37) என்பவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு அனுமதிக்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் இன்று புதன்கிழமை (30) தெரிவித்தனர்.

சுன்னாகம் சந்தியில் வீடியோக் கடை நடத்திவரும் இவ்வர்த்தகர், நேற்றையதினம் (29) இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். இதன்போது முகத்தை மூடிக் கொண்டு  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இவ்வர்த்தகர் மீது வாள்வெட்டு மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்வர்த்தகரை அங்கு நின்ற பொதுமக்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .