2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்.வதிரி ஆலங்கட்டிச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதன்கிழமை (06) அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

துன்னாலையினைச் சேர்ந்தவர்களான அருளானந்தன் ராசா (வயது 25), எஸ். ஜெயரூபன் (வயது 20) மற்றும் வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த மகேந்திரன் மயில்வாகனம் (வயது 53) ஆகிய மூவருமே படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .