2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

உணவக நீர்த் தாங்கியில் எண்ணெய்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.சுன்னாகம் நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் நீர்த்தாங்கியினுள், இனந்தெரியாதோர் சிலர் எண்ணெய் ஊற்றியுள்ளனர் என்று, மேற்படி உணவக உரிமையாளர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

மேற்படி உணவகத்தின் முன்னால், மாலை நேரத்தில் ஒன்றுகூடிய இளைஞர்களே இவ்வாறு எண்ணெய் கலந்திருக்கலாம் என உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .