2025 ஜூலை 09, புதன்கிழமை

லேகியம் விற்றவருக்கு விளக்கமறியல்

George   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். மிருசுவில் உசன் பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு 'லேகியம்' எனப்படும் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த 27 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உசன் பகுதியில் பாடசாலை மாணவர்கள் லேகியம் (குழி) எனப்படும் போதைப் பொருளைப் பயன்படுத்துவதாக கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், மேற்படி போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்ட நிலையில், இதனை விற்பனை செய்தவர் அதேயிடத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மேற்படி சந்தேகநபர் வியாழக்கிழமை (14) மாலை கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (15)  சந்தேகநபரை  சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .