2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். நுணாவில் பகுதியில் செவ்வாய்கிழமை (19) இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் புதன்கிழமை (20) தெரிவித்தனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று வேறோரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றதுள்ளது.

இந்த விபத்தில், படுகாயமடைந்த நல்லூரைச் சேர்ந்த அ.அகிந்தன் (வயது 33) யாழ். போதனா வைத்தியசாலையிலும், நுணாவில் மேற்கைச் சேர்ந்த கந்தன் தயாபரன் (வயது 39) என்பவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .