2025 ஜூலை 09, புதன்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்றவர் நட்டஈடு கட்டினார்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

யாழ். அல்வாய்ப் பகுதியில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற நபருக்கு, பருத்தித்துறை நீதிமன்றத்தால் 1 இலட்சத்து 72 ஆயிரத்து 505 ரூபாய் நட்டஈட்டை மின்சார சபைக்கு செலுத்துமாறும், அத்துடன் 20 ஆயிரம் ரூபாய் அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளதாக, நெல்லியடிப் பொலிஸார் சனிக்கிழமை (30) தெரிவித்தனர்.

சுன்னாகம் மின்சார சபை அதிகாரிகளும், நெல்லியடிப் பொலிஸாரும் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (22) நடத்திய சோதனை நடவடிக்கையில், மேற்படி நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து, மேற்படி நபருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு வெள்ளிக்கிழமை (29) மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் ஜே.கஜநிதிபாலன் நட்டஈடு, மற்றும் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .