2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வலி.வடக்கு மீள்குடியேற்ற விவகாரம்; பிரிட்டனுக்கு மகஜர்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்று, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.ஜோன் ரங்கினிடம், நேற்று செவ்வாய்க்கிழமை (02) கையளிக்கப்பட்டது.

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக்குழுவின் தலைவரும் வலி.வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளருமாகிய சண்முகலிங்கம் சஜீவனால் இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.

வலிகாமம் வடக்கில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும், அக்கிராம மக்களின் மீள்குடியேற்றத்தைத் தடுத்து, வேறு பிரதேசங்களில் அவர்கள் குடியேற்றப்படுவது குறித்தும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், காங்கேசன்துறை சீமெந்து ஆலை உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதால், வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் வேலைவாய்ப்பின்றி முகாம்களில் வாழ்வதாகவும் முகாம்களின் காணி உரிமையாளர்களால் முகாம் மக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .