2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வர்த்தக நிலைய உரிமையாளரை தாக்கிய இருவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2014 செப்டெம்பர் 27 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கைதடியில் உள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்து உரிமையாளரைத் தாக்கி காயப்படுத்திய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், வெள்ளிக்கிழமை (26) உத்தரவிட்டார்.

கைதடியில் வர்த்தக நிலையத்தினுள் புகுந்து இருவர் தன்னை தாக்கியதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்  வர்த்தக நிலைய உரிமையாளர் வியாழக்கிழமை (25) முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து அவ் இருவரையும் கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .