2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மூதாட்டியை தாக்கி, பணம் நகை அபகரிப்பு

George   / 2014 ஒக்டோபர் 01 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். நவாலி பகுதியில் வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கிவிட்டு அவரிடமிருந்து 5 பவுண் நகை மற்றும் 14 ஆயிரம் ரூபாய் பணம் என்பன செவ்வாய்க்கிழமை(30) இரவு திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார், புதன்கிழமை (01) தெரிவித்தனர்.

இதில் படுகாயமடைந்த நவரட்ணம் விஜயதேவி (வயது 71) என்ற மூதாட்டி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.

மேற்படி வீட்டில் மூதாட்டியும், அவருடைய உதவியாளர் ஒருவரும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (30) உள்நுழைந்தவர்கள், உதவியாளாரை கட்டிவைத்து, மூதாட்டியை கடுமையாக தாக்கி, பணம் நகைகளை திருடி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .