2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அனுமதிக்கு மேலதிகமாக ஆடு கொண்டு சென்றவர்கள் கைது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்.வேலணை பகுதியில் இருந்து கிளிநொச்சிக்கு அனுமதியளித்தமைக்கு மேலதிகமாக ஆடுகளை பாரவூர்திகளில் கொண்டு சென்ற இரண்டு சந்தேகநபர்களை வெள்ளிக்கிழமை (03), நுணாவில் சந்தி பகுதியில் வைத்து கைது செய்ததாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். 

மேற்படி இரண்டு சந்தேகநபர்களும் 8 ஆடுகளை கொண்டு செல்வதற்கான அனுமதியை பெற்று, 20 ஆடுகளை கொண்டு சென்றுள்ளனர்.

இதனை நுணாவில் சந்தியில் வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் கண்டுபிடித்து, இருவரையும் கைது செய்து ஆடுகளுடன் கூடிய பாரவூர்திகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .