2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இ.போ.ச பஸ் மீது கல்வீச்சு தாக்குதல்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது செம்மணி வீதியில் வைத்து வியாழக்கிழமை (16) இரவு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் கூறினர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே இந்த கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்ததுடன், சாரதிக்கு சிறு கீறல் காயங்கள் ஏற்பட்டன.

இதனையடுத்து, குறித்த பஸ்ஸை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .