2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இந்திய அமைதிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட வைத்தியசாலை பணியாளர்களின் நினைவுதினம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 21 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


இந்திய அமைதிப்படையால் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கடமையிலிருக்கும் போது சுட்டுக்கொலை செய்யப்பட்ட வைத்தியசாலை பணியாளர்களின் 27ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68பேரை சுட்டுக்கொலை செய்திருந்தனர்.

இன்றை அனுஷ்டிப்பு நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஓய்வுபெற்ற வைத்தியசாலை பணியாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .