2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வெளிச்ச வீடு திறந்து வைப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் இலங்கை இராணுவத்தின் 55ஆவது படைப்பிரிவினரால் 2 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வெளிச்சவீடு மக்களின் பாவனைக்காக புதன்கிழமை (22) இரவு 7 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

கட்டைக்காட்டு சென்.மேரிஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய இலங்கை இராணுவத்தின் 55ஆவது படைப்பிரிவினரால் இந்த வெளிச்சவீடு அமைக்கப்பட்டது.

இந்த வெளிச்ச வீட்டை, 55ஆவது படைப்பிரிவின் அதிகாரி பிரிகேடியர் மு.திருநாக்கரசு திறந்து வைத்தார்.

இந்த வெளிச்சவீடு அமைக்கப்பட்டதன் மூலம் வடமராட்;சி கிழக்கு பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கும் போது காலநிலை மாற்றத்தின் போதான ஆபத்துக்களிலிருந்து தப்பித்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
 
இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு சமாச செயலாளர் எ.பெ.அன்ரனி  கட்டைக்காட்டு கிராமிய அபிவிருத்தி சங்க தலைவர் யா.நிமலன் விமலதாஸ், இராணுவத்தினர் மற்றும் மீனவர்கள் உள்ளி;ட்ட பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .