2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மகள் மீது தாய் முறைப்பாடு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தனது நகை மற்றும் பணத்தை மகள் திருடிக்கொண்டு சனிக்கிழமை (25) இரவு ஓடிவிட்டதாக கரவெட்டி கரணவாய் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

வீட்டிலிருந்த 25 பவுண் நகை மற்றும் 2 இலட்சம் ரூபாய் காசு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கிளிநொச்சி இரணைமடுவை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் மகள் சென்றுவிட்டதாக தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் திருட்டு குற்றச்சாட்டில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .