2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 07 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கரையொதுங்கிய மற்றும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் வெள்ளிக்கிழமை (07) உத்தரவிட்டார்.

செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி, மாதகலுக்கு அண்மித்த கடற்பரப்பில் 4 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்கள், செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி எரிபொருள் தீர்ந்த நிலையில் ஒரு படகுடன் நெடுந்தீவில் கரையொதுங்கிய 4 இந்திய மீனவர்கள், கடந்த 7ஆம் திகதி கச்சதீவு பகுதியில் காற்றினால் கரையொதுங்கிய 4 இந்திய மீனவர்கள் ஆகியோரின் விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.

16 இந்திய மீனவர்கள் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினராலும் மிகுதி 8 மீனவர்கள் நெடுந்தீவு பொலிஸாரினாலும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .