2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் பலி

A.P.Mathan   / 2014 நவம்பர் 07 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்
 
யாழ். வல்வெட்டித்துறை புற்றாலை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (07) இளநீர் பிடுங்க மரத்தில் ஏறியவர், வலிப்பு ஏற்பட்டு கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அதேயிடத்தை சேர்ந்த இராசநாயகம் இந்திரதாஸ் (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார்.
 
மரத்தில் ஏறியவுடன் வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் கீழே வீழ்ந்த போது கிணற்று கட்டுடன் அடிபட்டு படுகாயமடைந்தார்.
 
தொடர்ந்து வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
 
இவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .