2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உருகுலைந்த நிலையில் வயோதிப பெண்ணின் சடலம்

Gavitha   / 2014 நவம்பர் 08 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், ற.றஜீவன்

யாழ். பருத்தித்துறை இன்பசிட்டி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண்ணொருவரின் சடலம்  வெள்ளிக்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர், அதேயிடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் சரோஜாதேவி (வயது 65) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், குறித்த வயோதிப பெண் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், வயோதிப பெண்ணின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அயலவர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்த போது, வயோதிப பெண் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொதுமக்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்;ததையடுத்து, திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ். சிவராஜ்ஜூடன், அவ்விடத்துக்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார்  சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தாக தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்ட வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .