2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மதுபானம் விற்றவருக்கு அபராதம்

George   / 2014 நவம்பர் 15 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வீட்டில் வைத்து மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபருக்கு 5ஆயிரம் ரூபாயினை அபராத தொகையாக செலுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன், வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டார்.

கடந்த 10ஆம் திகதி நெல்லியடி இராஜகிராமம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம்; விற்ற 27 வயதுடைய நபரை நெல்லியடி பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அத்துடன் சந்தேக நபரிடம் இருந்து 175 மில்லி லீற்றர் மதுபான போத்தல்கள் எட்டினையும் பறிமுதல் செய்திருந்தனர்.

மேற்படி சந்தேக நபருக்கு எதிராக நெல்லியடி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்படி தொகையினை அபராதமாக செலுத்த உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .