Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரவெட்டி கிழக்கு நெல்லியடி பகுதியில், தாய்ப்பால் புரையேறியதால் சிசுவொன்று பலியான சம்பவம், வெள்ளிக்கிழமை(03) இரவு இடம்பெற்றுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
நிஸான் இந்துஜன் என்ற 51 நாட்களேயான ஆண் சிசுவே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரவு 8 மணியளவில், குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு குழந்தை நித்திரையில் உள்ளதாக நினைத்த தாய், வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், இரவு 9 மணியளவில் குழந்தையை தூக்கியபோது சிசு அசைவற்று காணப்பட்டுள்ளது.
உடனடியாக குழந்தையினை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago