Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பருத்தித்துறை கடற்பரப்பை அண்மித்த இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெள்ளிக்கிழமை(03) கைதான இந்திய மீனவர்கள் 37 பேரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, சனிக்கிழமை(04) உத்தரவிட்டார்.
நாகப்பட்டினம், அக்கரைபேட்டை பகுதியை சேர்ந்த 37 இந்திய மீனவர்களும், 5 விசைப்படகுகளுடன் பருத்தித்துறையை அண்மித்த காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் அனைவரும் கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் சனிக்கிழமை(04) காலை ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
நீரியல் வளத்துறை அதிகாரிகள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.
இதன்போது, இவர்கள் அனைவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
30 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago