Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ் பண்டத்தரிப்பு சில்லாலை பகுதியிலுள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் 10 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் கறுப்பையா ஜீவராணி வியாழக்கிழமை (16) உத்தரவிட்டார்.
இளவாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் 5 பொலித்தீன் பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சாவை மீட்டனர்.
தொடர்ந்து மேலதிக விசாரணை மேற்கொண்ட பொலிஸார், அதேபகுதியை சேர்ந்த 19 வயதுடைய சந்தேகநபரை கைது செய்தனர்.
இந்தியாவிலிருந்து கடல் மார்;க்கமாக கொண்டுவரப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகநபர் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025